Home » » நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் கோட்டாபயவின் அறிவிப்பு

நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் கோட்டாபயவின் அறிவிப்பு

நாட்டில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே ஆகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிப்பது மற்றும் சமூக பாதுகாப்பிற்காக பொறுப்புடன் செயற்படுவதும் கட்டயமாகுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்துவதற்காக கடந்த 4 வாரங்களாக அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை தளர்த்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுகாதார அதிகாரிகள் வகுத்துள்ள அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும் நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறும் ஜனாதிபதி தனது டுவிட்டர் சமூக வலைத்தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |