கொரனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது கடந்த முறைபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
கொரனா தொற்றினை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பலசரக்கு நிலையங்கள்,மருந்துக்கடைகள்,பழம் விற்பனை நிலையங்கள் மட்டுமே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏனைய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு எந்த அனுமதியும் இல்லை.கடந்தமுறை இந்த கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு நடவடிக்கையெடுத்தோம்.ஆனால் இம்முறை அவ்வாறு கடைகள் திறக்கப்படுமானால் அக்கடைகள் சீல் வைத்து மூடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு பகுதிகள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதன் காரணமா வீதியோர வியாபாரங்கள் முற்றாக தடைசெய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது கடந்த முறைபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
கொரனா தொற்றினை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பலசரக்கு நிலையங்கள்,மருந்துக்கடைகள்,பழம் விற்பனை நிலையங்கள் மட்டுமே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏனைய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு எந்த அனுமதியும் இல்லை.கடந்தமுறை இந்த கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு நடவடிக்கையெடுத்தோம்.ஆனால் இம்முறை அவ்வாறு கடைகள் திறக்கப்படுமானால் அக்கடைகள் சீல் வைத்து மூடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு பகுதிகள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதன் காரணமா வீதியோர வியாபாரங்கள் முற்றாக தடைசெய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments: