ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 11 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரை 104 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: