Home » » இத்தாலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது - மிகுந்த கலக்கத்தில் அமெரிக்கா

இத்தாலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது - மிகுந்த கலக்கத்தில் அமெரிக்கா

உலக அளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்திற்கு சென்றுள்ளது.
சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில வாரங்களாக கோரத்தாண்டவம் ஆடி வந்தது.

அந்நாடு கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது.
ஆனால் தற்போது கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கிக்கொண்டுள்ளது. அந்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியிலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்துக்கு சென்றுள்ளது.
அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 5 லட்சத்து 22 ஆயிரத்து 320 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 86 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்துக்கு சென்றுள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |