Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் கொரோனா காலத்தில் உதவக் கூடிய தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர்!

சூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

அம்பாறை, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்.சௌபாத் என்பவரே இந்த சாதனத்தைக் கண்டுபிடித்தார். சாய்ந்ததமருதைச் சேர்ந்த இவர் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவராவார்.

இவரது முதலாவது கண்டுபிடிப்பாக மின் மோட்டார் மூலமாக மா அரிக்கும் இயந்திரத்தையும் இரண்டாவது கண்டுபிடிப்பாக சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தையும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

மேலும் குறித்த புதிய கண்டுப்பினை ஊக்குவிக்க இறைவனும் பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாகத் தெரிவித்த இளம் கண்டுபிடிப்பாளர், மின்சார வசதி அற்ற பகுதிகளில் இந்தச் சாதனத்தை உபயோகப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments