ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் இன்று முதல் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த காலத்தில் தேவை இன்றி வீதிகளில் நடமாடியவர்கள், வீதிகளில் கூடி நின்று கதைத்தவர்கள் என கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,185 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், ஆயிரத்து 293 வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: