Home » » கல்லடிப் பால சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆளுனருடனான கலந்துரையாடல் !

கல்லடிப் பால சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆளுனருடனான கலந்துரையாடல் !


(LEON)
மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண கௌரவ
ஆளுனர் அனுராதா யகம்பத் அவர்களுக்கும், தேசிய தன்னார்வ தொண்டு
நிறுவனமான அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. முரளிதரன்
அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில்
நடைபெற்றது. 

அம்கோர் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் மட்டக்களப்பில் புதிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக கல்லடிப் பாலத்தினை சாகசப் பூங்காவாக அபிவிருத்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான முக்கிய
விடயங்களை ஆளுனர் அவர்கள் ஆராய்ந்ததுடன் பாலத்தின் தற்போதைய
நிலைமையினையும் பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களும்
கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் தவிசாளர் திரு. ஹரி பிரதாப்
அவர்களும் கலந்து கொண்டு கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தியில்
இத்திடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக ஆளுனருக்கு தெளிவு படுத்தினார்.
இலங்கையில் புகழ்பெற்ற பாலமாகத் திகழ்ந்த கல்லடிப்பாலம் அண்மைக்கால பல தற்கொலைகளுக்கான மையமாக மாறிவரும் நிலையில் இத்திட்டம் பலருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதோடு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அபிவிருத்தி செய்யப்படும் என அம்கோர் நிறுவனப்பணிப்பாளரினால் ஆளுனரிடம் தெரிவிக்கப்பட்டது.













கல்லடிப் பால சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆளுனருடனான கலந்துரையாடல் !

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |