( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றம் சாய்ந்தமருது ” மருதூர் சதுக்கத்தில் ” கடற்கரையோர சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கும் திட்டத்தின் அடிப்படையில் பொழுது போக்கிற்காக கடற்கரை பிரதேசத்திற்கு வரும் பொதுமக்களின் பாவனைக்கென கொங்கிறீட் கதிரைகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாய்ந்தமருது பகுதியில் அண்மையில் திண்மக்கழிவகற்றலை ஒழுங்குபடுத்தி பொதுமக்களுக்கு அன்றாடம் சேரும் வீட்டுக்கழிவுகளை பொது இடங்களில் போடாத வகையில் கல்முனை மாநகரசபையுடன் இணைந்து ஒரு கிரரமமான முறையை அமுல்படுத்தி வருகின்றனர்.
0 comments: