( எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
கம்பஹா மாவட்ட மாஸ்டர் விளையாட்டு சம்மேளனம் விளையாட்டு அமைச்சின் அனுசரணையில் நடாத்திய 6வது மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டி அண்மையில் கம்பஹா ஶ்ரீமாவோ பண்டார நாயக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட பல விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதில் கலந்துகொண்டசாய்ந்தமருதைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றியாஸ் ஆண்களுக்கான பரிதி வட்டம் வீசும் நிகழ்சியில் தங்க பதக்கமும்,
ஈட்டி எறிதல் நிகழ்சியில் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளார்.
0 Comments