( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
தற்போதய இலங்கையின் அரசியல் கள நிலவரம் மற்றும் எதிர்கால அரசியல் காய் நகர்த்தல் தொடர்பில் ஆராயும் வகையில் அரசியல் புரட்சிகர முன்னணியின் மகா சபைக் கூட்டமும் இவ் விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்றும் இன்று 14 ஆம் திகதி புதன் கிழமை காலை 10.00 மணிக்கு சாய்ந்தமருது பேர்ள்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது..
அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஸி.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இலங்கையின் தற்போதய அரசியல் நிலமையும் பிரதேச மக்களின் வகிபாகம் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன் இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments: