Home » » பரீட்சைக் கொடுப்பனவு இணைந்த படிகளுடன் சேர்த்து வழங்கப்படும்; பரீட்சை ஆணையாளர் - ஜோசப் ஸ்ராலின் சந்திப்பில் இணக்கம்!

பரீட்சைக் கொடுப்பனவு இணைந்த படிகளுடன் சேர்த்து வழங்கப்படும்; பரீட்சை ஆணையாளர் - ஜோசப் ஸ்ராலின் சந்திப்பில் இணக்கம்!

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வழங்கும் தற்போதைய கொடுப்பனவுகளின் முரண்பாடுகள் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கம் பரீட்சைத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.


தரம் 5 மற்றும் உயர்தர பரீட்சைக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக இணைப்பாளருக்கு 600/- ரூபாவும் துணை இணைப்பாளருக்கு 300/- ரூபாவும் மேற்பார்வையாளர்களுக்கு 300/- ரூபாவுமாக 1500/- ரூபாவுக்கு மேலதிகமாக வழங்கும் 2019/27 தற்போதைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


ஆனால் 2018 ஆம் ஆண்டு க.பொ.த சா/தர பரீட்சை வரை இணைந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால் இணைந்த கொடுப்பனவை நீக்கியே இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.


2018.08.21ம் திகதி வெளியிடப்பட்ட 20/2018 நிர்வாக சுற்றறிக்கையில் இணைந்தகொடுப்பனவு அதிகரிக்கப்பட்டதுடன்- 24 மணிநேரம் கடமையாற்றுவோருக்கு 50வீதம் மேலதிக கொடுப்பனவாகவும் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை அமுல்படுத்தாமல் - இணைந்த கொடுப்பனவையும் வழங்காமலே - மேலதிக கொடுப்பனவாக மட்டும் வழங்க முயற்சிக்கிறார்கள்.


இந் விடயம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் பரீட்சை ஆணையாளருக்கும் இடையே நடந்த சந்திப்பில் இணைந்த கொடுப்பனவை வழங்க பரீட்சை ஆணையாளர் தற்போது இணங்கியுள்ளதாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.


இவ்விடயங்களை உயர்தர பரீட்சை  முடிவதற்குள் சுற்றறிக்கையாக வெளியிடுமாறும் - இனிமேல் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது தவிர்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியதாகவும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |