ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் அமைச்சர்களின் அறிவிப்புக்காக அலரிமாளிகையில் ஊடகவியாளர்கள் காத்திருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முஸ்லிம் ஆளுநர்கள் பதவி விலகியுள்ளதால் முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என ரணிலும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும் விடுத்த கோரிக்கைகளை முஸ்லீம் அமைச்சர்கள் முற்று முழுதாக நிராகரித்து விட்டார்கள்.
0 comments: