Home » » இஸ்ஸாமிய பெண்களின் ஆடை தொடர்பில் இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!

இஸ்ஸாமிய பெண்களின் ஆடை தொடர்பில் இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!


நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டம் தொடர்பில் புரிதல் இல்லாமையினால் சில முகத்தை மூடியவாறு பாடசாலைக்கு வருவதால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் பாடசாலை நிர்வாகம் தலையிட வேண்டிய முறை தொடர்பில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
முகத்தை மூடிவருவோர் தொடர்பில் பாடசாலை முக்கியஸ்தர்கள் தலையிட வேண்டிய முறை மற்றும் பாடசாலைக்கு பிரவேசிக்கும் பொழுது முகத்தை மூடிய வண்ணமான ஆடை மற்றும் பாதுகாப்பு கவசம் அணிவது தொடர்பில் கட்டளைகள் அடங்கிய விஷேட கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
முழுமையாக முகத்ததை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட வதிகளின கீழ் வெளியிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படும் கட்டளைகளுக்கு அமைவாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழு முகத்தை மூடுவது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிருபனத்துடன் கல்வி அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த விஷேட கடிதம் கல்வி அமைச்சின் செயலாளரினால் பாடசாலை முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில் சில நபர்கள் பாடசாலைக்கு வருதல், அதே போன்று சில ஆசிரியர்கள் முகத்தை மூடிய வண்ணம் உடை அணிந்துக் கொண்டு பாடசாலைக்கு வந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |