Home » » வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இராவணா? இலங்கையின் முதலாவது செய்மதி...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இராவணா? இலங்கையின் முதலாவது செய்மதி...

இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டு ராவணா- 1 என்ற பெயரிடப்பட்ட செய்மதி அமெரிக்காவில் இருந்து சர்வதேசவிண் வெளிமையத்திற்கு இன்று18/04/2019 அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
ராவணா-1 என்ற செய்மதி சிங்கன் என்ற ரொக்கட் ஊடாக அமெரிக்காவின்விண்வெளிஆய்வுமையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது நாசா நிறுவனம்அறிவித்துள்ளது.
இலங்கையின் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிதுஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல்பட்டம் பெற்ற துலானிசாமிகா என்ற மாணவியும் இணைந்து குறித்த செய்தியை ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ராவணா 1 என்றசெய்மதி 1000 சென்றிமீற்றர்நீளமுடையதும்1.1 கிலோகிராம் நிறையுடையதுமாகும்.
விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் ஏனைய உலக நாடுகளுக்கு இணையாக இலங்கையும் முதன் முறையாக செய்மதியொன்றை விண்ணுக்கு ஏவி வரலாற்று சாதனைபடைத்துள்ளது.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |