கட்டாரில் சாரதியாக பணிபுரிந்து வந்த மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி, மீராவோடையைச் சேர்ந்த லத்தீப் முஹம்மத் ஹஸான் (வயது 21), நேற்று இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக கட்டார் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளும் இடம்பெறுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments: