Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உண்ணாவிரதத்தை கைவிட்டார் தாய்!

தனது கணவனை விடுதலை செய்யக் கோரிய நான்கு பிள்ளைகளின் தாய் மட்டக்களப்பில் மேண்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்றிரவு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவியும் அவரது பிள்ளைகளுமே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் நேற்று காலை முதல் மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி டி.ஹகவத்துற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்ணிடம் பேச்சு நடாத்தினார்.
இதன்போது அவர் “கைக்குழந்தை உட்பட ஐந்து வயதுக்கும் குறைந்த வயதுடைய குழதைகளை வீதியில் நிறுத்தி போராடுவது குழந்தைகளின் உரிமையினை மீறும் செயல். அத்துடன் குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமானால் அதற்கான பொறுப்பினை தாய் ஏற்றுக்கொள்ள வேண்டும். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவர்கள் எந்த குற்றமும் செய்திருக்காவிட்டால் விடுதலை செய்யப்படுவார்கள். ஆகையால் எமது சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்தே குறித்த தாய் தனது உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவு செய்வதாகவும் நிரபராதியான தனது கணவனை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் வேறு முடிவுகளை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர் செல்வி மனோகர், சர்வமத ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் அவ்விடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments