Advertisement

Responsive Advertisement

பேரதிர்ச்சியில் மஹிந்த; வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்!

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சரகர் விளையாட்டின் போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்ததன் பின்னர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படு அவருக்கு தீவிர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரகர் விளையாட்டின் போது இடம்பெற்ற கடுமையான விபத்தில் யோஷிதவின் முகம் மற்றும் தலைப்பகுயில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு தீவிர உட்படுத்தப்பட்டார்.
எவ்வாறாயினும் அவரது உடல் நிலை ஆபத்தான கடத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளதுடன் அவரது முகம் இரும்பு தகடுகள் பயன்படுத்தி மீளவும் சரி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் அவர் மீளவும் ரகர் விளையாட முடியாதென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments