கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்தே ஆகக் கூடுதலான சுற்றலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்த வருடத்தில் முதல் 11 மாத காலப்பகுதியில் 20 இலட்சத்து 80 ஆயிரத்து 627 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருப்பதாக சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 580 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்தனர். கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 16 சதவீத அதிகரிப்பாகும். கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்தே ஆகக் கூடுதலான சுற்றலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
0 Comments