Home » » மலையகத்திலிருந்து கொழும்பு நோக்கி பாத யாத்திரை

மலையகத்திலிருந்து கொழும்பு நோக்கி பாத யாத்திரை


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வழியுறுத்தி அட்டன் வெளிஒயா தோட்டப்பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவொன்று பொகவந்தலாவ நகரிலிருந்து தலைநகர் கொழும்பு நோக்கி பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதயாத்திரை எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நிறைவடையும என எதிர்பார்க்கபடுவதாக குழுவின் தலைவர் ஜேசுதாஸ் தெரிவித்தார்.

இந்த பாதயாத்தியரையானது பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலைத் தொழிற்சாலையில் ஆரம்பிக்கப்பட்டு பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்பாக தேங்காய் உடைத்து தனது பாதயாத்திரையை ஆரம்பித்தனர். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |