Home » » சுவீடனில் இருந்து தாயகம் திரும்பியோரும் ஓமந்தை விபத்தில் சிக்கினர்!

சுவீடனில் இருந்து தாயகம் திரும்பியோரும் ஓமந்தை விபத்தில் சிக்கினர்!

ஓமந்தையில் நேற்று நடந்த விபத்தில் சிக்கியவர்களில் சுவீடனில் இருந்து நாடு திரும்பியவர்களும் உள்ளடங்கியுள்ளனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா- ஓமந்தை பகுதியில் நேற்றுக் காலை, ஆளில்லா ரயில்வே கடவையை கடக்க முயன்ற சிறிய ரக கார் ஒன்று, ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுவீடன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர்களும் இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர். சுவீடன் நாட்டு பிரஜையான 30 வயதான கமலநாதன் சிவரஞ்சனி அதில் உயிரிழந்தார். மேலும், அவரது தாயாரான, நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 56 வயதான இசை ஞானவதி யோகரத்னம்,சகோதரியான 32 வயதான காண்டீபன் யமுனா ரஞ்சனி, சகோதரியின் மகள் 13 வயதான காண்டீபன் டிசாலினி ஆகியோரும் விபத்தில் உயிரிழந்தனர்.
விபத்தில், சுவீடனில் இருந்து திரும்பிய 34 வயதான ஜேம்ஸ் கமலநாதன் மற்றும் அவரது மகளான ஆறு வயதான கமலநாதன் ஜெசிகா ஆகியோர் படுகாயம் அடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |