Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழில் ரெஜினா கொலை செய்யப்படுவதற்கு முன் இத்தனை கொடூரங்களா? வெளிவந்துள்ள பதைபதைக்கும் தகவல்

யாழ். சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினா பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி உ.மயூரதன் குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாடசாலை சீருடையுடன் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி சிவனேஸ்வரன் றெஜினா, கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி பாடசாலைக்கு சென்று மதியம் வீடு திரும்பியுள்ளார்.
மாணவி வீட்டிற்கு வந்த நேரத்தில், தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளார். தகப்பனார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் மாலை 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடியுள்ளார்.
எனினும், அங்கு வரவில்லை என சிறுமியின் பெரியதாயார் தெரிவித்ததனையடுத்து குறித்த சிறுமியியை உறவினர்கள் ஒன்று சேர்ந்து தேடியுள்ளனர்.
விடயத்தினை அறிந்த அந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியுள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.
சிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர் கதறி அழுதவாறு தாயாருக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் உறவினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் சிறுமியின் சடலத்தினை மீட்டிருந்ததுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments