Advertisement

Responsive Advertisement

வாகனத்தின் வேகத்தை குறைக்க பொலிஸாரின் வித்தியாசமான கண்டுபிடிப்பு

போக்குவரத்து சட்டங்களை மீறி வேகமாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை குறைக்க பொலிஸார் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
முந்தலம பொலிஸாரினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முந்தலம பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான வீதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு சமமான உருவங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புத்தளம் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியின் உத்தரவிற்கமைய புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் கிரியன்கல்லியில் இருந்து கரிக்கட்டி வரையான வீதியில் இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளின் உருவ பதாகை பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனை பார்த்தால் பொலிஸ் அதிகாரிகள் நிற்பது போன்று காட்சியளிப்பதனால் வாகனங்களின் வேகம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Post a Comment

0 Comments