Advertisement

Responsive Advertisement

யாழில் பதட்டம் பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு பொலிஸார் தீவிர விசாரணை


யாழ்ப்பாணம், புல்லுக்குளத்துக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்தப்பட்டி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றன யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகாமையில் இன்று காலை மீட்கப்பட்டன.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் சற்று பதட்ட நிலை காணப்பட்டது.
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும் அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாகவும் அதிபர் குறிப்பிட்டார். அந்தவேளையில் தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் எனவும் அதிபர் சந்தேகம் வெளியிட்டார்.இந்த நிலையில்இந்த சம்பவம் குறித்து யாழ் பொலிஸ் நிலைய தடயவியல்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .(15)3-15

Post a Comment

0 Comments