Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் விபத்து ஒருவர் படுகாயம்


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிராங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை பகுதியிலிருந்து லொறி ஒன்றும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிரே வந்துள்ளதுடன், இரண்டு வாகனங்களுக்கிடையில் திடீரென மாடு ஒன்று குறுக்கிட்டு சென்றதினால் லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மல்வத்தையைச் சேர்ந்த 17 வயதுடைய ரதன் ஜனோஜித் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் லெறியின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதாகவும், வாகனங்களுக்கிடையில் குறுக்கிட்டு சென்ற மாடும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவத்து ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்ட நிலையில் இளைஞர்கள் போக்குவரத்தினை சீர் செய்துள்ளனர்.


Post a Comment

0 Comments