கல்முனை வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் பேரூந்து நேரப் பதிவாளர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் வைத்து இன்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டில் 100 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னால் வருகின்ற பேரூந்துகளால் இடையூறு இன்றி தமது பேரூந்தை செலுத்துவதற்கு தேவையான வசதியை செய்து தருவதற்காக அவர் இவ்வாறு இலஞ்சம் பெற்றுள்ளார்.
இவர் பல காலமாக தனியார் பஸ்களிடமிருந்து இவ்வாறு இலஞ்சம் பெற்று வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


0 Comments