Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அம்பாறையில் கூட்டமைப்பின் இரு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ரெலோ எம்.பியே காரணம்!

அம்பாறை மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டு வேட்புமனுக்கள் நேற்று நிராகரிக்கப்பட்டன. அந்தச் சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பொறுப்பு ரெலோ கட்சியைச் சேர்ந்தவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரே கட்சியின் முகவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தவறு காரணமாகவே அந்த இரு வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தது.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தமிழ் அரசுக் கட்சியின் வேட்புமனுக்கள் கட்சியின் முகவர் இல்லாது தலைமை வேட்பாளரினால் தாக்கல் செய்யப்பட்டமையாலேயே நிராகரிக்கப்பட்டன என்று தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்தார்.
இந்தச் சபைகளுக்கான கட்சியின் முகவராக ரெலோ கட்சியைச் சேர்ந்தவரும் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவீந்திரன் கோடீஸ்வரன் கட்சிச் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இந்த இரு சபைகளுக்கும் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு தலைமை வேட்பாளர்களை அனுப்பி வைத்து விட்டு மற்றைய இரு சபைகளுக்கும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தான் நேரில் சென்றிருந்தார். ஆலையடிவேம்பு மற்றும் சம்பாந்துறை சபைகளில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டு ஆட்சேபனை எழுப்பப்பட்டதை அடுத்து அந்த வேட்புமனுக்களை நிராகரிப்பதாகத் தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்தார்.

Post a Comment

0 Comments