இந்தியாவில் புது டில்லி நகரில் நேற்று இரவு இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித அழுத்தமும் இல்லை என்று வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 5.5 ரிச்சர் அளவாக அந்த நில அதிர்வு பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்க செய்தியை தொடர்ந்து இலங்கையின் சில கரையோர பிரதேசங்களிலுள்ள மக்கள் பீதியடைந்தனர். இதேவேளை டில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள இலங்கையர் எவருக்கும் பாதிப்பேற்பட்டதா என்பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கூடிய கவனம் செலுத்திவருகின்றது. இது தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை இல்லை
0 Comments