|
முதன்முறையாக கலப்பு முறையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு 3.5 பில்லியன் ரூபா செலவாகும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். “தேர்தலில் 60 வீதமானோர் தொகுதி முறையிலும் 40 வீதமானவர்கள் விருப்புத் தெரிவு முறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
|
2018ஆம் ஆண்டின் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 5.5 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் அதில் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகை உள்ளூராட்சி தேர்தலுக்கு செலவிடப்படவுள்ளது.உள்ளுராட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நாளை முதல் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.
|


0 Comments