மட்டக்களப்பு, தரவைப் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை குடும்பிமலை கிராம அபிவிருத்திச் சங்கம், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர், இன்று துப்புரவு செய்தனர். யுத்த காலத்தில் மரணமடைந்த விடுதலைப் புலிகளின் வித்துடல்களை விதைப்பதற்காக , தரவை துயிலும் இல்லம் அமைக்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டது.
|
இந்நிலையில், குறித்த இடங்களை எல்லைப்படுத்தி,பொது மயானமாக ஆக்கும் நோக்கில், குடிம்பிமலை பகுதியிலுள்ள சுமார் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்வந்து பொது மயானத்தை சுத்தப்படுத்தும் முகமாக பற்றைக் காடுகளை வெட்டி சுத்தப்படுத்தினர். தற்போது குறித்த துயிலும் அமைந்துள்ள அண்மித்த பகுதியில் தரவை இராணுவ முகாம் அமைந்துள்ளதுடன், கடந்த காலங்களில் குறித்த பகுதிக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
![]() ![]() |
0 Comments