Home » » வேலையற்ற பட்டதாரிகள் தொடர் சத்தியாக்கிரக போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் தொடர் சத்தியாக்கிரக போராட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தினை இரவு வேளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
தமக்கான நியமனங்களை வழங்க மத்திய மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
இன்று இரவும் பெருமளவானோர் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு பொது அமைப்புகள் தங்களது ஆதரவினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும் இந்த பட்டதாரிகளின் நிலைமையினை உணர்ந்து ஆதரவு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |