Advertisement

Responsive Advertisement

பால்மாக்களின் விலையை அதிகரிக்க அனுமதியில்லை

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்க அனுமதியளிக்காதிருக்க நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
முக்கிய பால்மா நிறுவனங்கள் சில இறக்குமதி செய்யும் பால்மாக்களுக்கான விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவுக்கு 100 தொடக்கம் 117 ரூபாவும், 400 கிராம் பால்மாவுக்கு 40 தொடக்கம் 46 ரூபாவும் விலையை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்கள் கோரியுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த விலை அதிகரிப்பு அவசியம் இல்லை என அதிகார சபை கருதுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களுக்கான விலையை அதிகரிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் கசித திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவுக்கு 810 ரூபாவும் 400 கிராம் பால் மாவுக்கு 325 ரூபாவும் உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலையாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments