மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூலாவடி 8ஆம் குறுக்கைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி சக்திவேல் (வயது 31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அறியமுடிகின்றது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments