குளிர்பானங்கள் உள்ளிட்ட சகல வகை குடி பானங்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ள சீனியின் அளவு அந்த பானங்கள் அடைக்கப்பட்டுள்ள போத்தல்களில் குறிப்பிடப்பட வேண்டுமேன சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மதல் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அவ்வாறான நோயாளர்கள் தாம் குடிக்கும் பானங்களின் சீனியின் அளவை இலகுவில் அறிந்துக்கொள்ளக் கூடிய வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments