Home » » மத்தியக் கிழக்கிற்கு அனுப்புவதாக கூறி பெண்களை இந்தியாவில் நிர்க்கதியாக்கும் நிறுவனம்

மத்தியக் கிழக்கிற்கு அனுப்புவதாக கூறி பெண்களை இந்தியாவில் நிர்க்கதியாக்கும் நிறுவனம்

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை தொழிலுக்காக அனுப்புவதாக கூறி இந்தியாவுக்கு அனுப்பி அவர்களை நிர்க்கதியாக்கும் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
விமான டிக்கற் விற்றபனை செய்யும் நிறுவனமொன்றே இதனுடன் தொடர்பு பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் பெண்ணொருவர் அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டு இந்தியாவில் நிர்க்கதியாக்கப்பட்ட தகவல் வெளியான நிலையிலேயே அடிக்கடி பல பெண்கள் இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் நடவடிக்கையெடுத்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |