சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 38 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடரந்தும் மாகாணத்திலுள்ள 23 பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மழையுடனான வானிலைக் காரணமாக மாகாணத்திலுள்ள சுமார் 10,000 மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மழைக் காரணமாக 12 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 11 மாணவர்கள் காணாமற்போயுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
0 Comments