இன்று காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையான 3 மணிநேரத்தில் 24.8 மில்லி லீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகரி கே.மூரியகுமார் தெரிவித்தார்.
தொடராக பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு, ஆரையம்பதி, வாகரை உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் கடும் மழை பெய்துவருவதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணிநேரத்தில் 53.6 மில்லிலீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
0 Comments