முருகப்பெருமானின் உகந்த ஆயுதமான தங்க வேலாயுதத்தை குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம் சுவாமி ஆலயத்திற்கு நேர் கடனாக வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (27) மாலை சந்நிதானத்தில் நடைபெற்றது.
சொர்ணம் குழுமங்களின் அதிபதி முத்துப்பிள்ளை விஸ்வநாதனால் 1 அடி நீளமான 22 கரட் தங்க வேலாயுதத்தை ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையைத் தொடர்ந்து குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காமம் சுவாமி ஆலய நிர்வாக சபையினர் சகிதம் மஹோற்சவம் நடைபெறும் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு இடம்பெற்ற அபிஷேக பூஜையின் பின்பு மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது.
வேலாயுதத்திற்கான அபிஷேக பூஜை செல்லக்கதிர்காம சுவாமி மஹோற்சவ பிரதம குரு சிவத்திரு வே. கு. நாகராசாக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தங்க வேலாயுத்தத்தை அன்பளிப்புச் செய்திருந்த முத்துப்பிள்ளை விஸ்வநாதனின் பிரதிநிதியாக கலந்து கொண்ட கோபாலபிள்ளை குணபாலச்சந்திரன் அவர்களுக்கு ஆலய நிர்வாகத்தினர் சார்பாக பிரதம குரு பொன்னாடை போர்த்;திக் கௌரவித்தார்.
செல்லக் கதிர்காம் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் நேற்று வியாழக்கிழமை திருவேட்டைத் திருவிழா செட்டிப்போடியார் அத்தியாகுடி மக்களின் உபயமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments