இலங்கையின் 8 வது பாராளுமன்ற அமர்விற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர், தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளைய தினம், சரியாக காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
இதில் முதலாவதாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும் எனவும், அதற்காக வாக்களிப்பு ஒன்றினை நடாத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்படும் எனவும், மாலை வேளையில் ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்தின் எதிர்க் கட்சி தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
0 Comments