Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நான் வந்ததும் முன்கதவால், செல்வதும் முன்கதவால் தான்!- பிரதமர்

தனக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுக்க தான் எப்போதும் தயார் எனவும், பிரதமர் பதவிக்கு தான், பின்கதவால் வந்தவர் அல்ல எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான் வந்ததும் பின்கதவால் அல்ல, செல்வதும் முன்வாசல் வழியாகவே எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த கூறிய விமர்சனம் தொடர்பில் பதிலளிக்கும் விதமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனக்கும், எனது கட்சிக்கும் முதுகெலும்பு பலமாகவுள்ளது. என்னைத் தகுதியில்லையெனக் கருதினால் விலக்குங்கள். எதிர்ககட்சியில் இருக்க நான் தயார் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments