Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆளுநரின் மட்டக்களப்புக்கான இந்த விஜயமானது பலமுனைப் பிரச்சினைகளை உருவாக்கி¬யிருக்கின்றது

யுத்த காலத்­துக்கு முன் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் குடி­யி­ருந்து இடம்­பெ­யர்ந்து சென்ற சிங்­கள மக்­களை அவர்கள் முன்பு குடி­யி­ருந்த அதே இடத்தில் குடி­யேற்ற கிழக்கு மாகாண ஆளுநர் முயற்­சி­ மேற்­கொண்டு வரு­கின்றார்.
மீள்­கு­டி­யேற்­றப்­படாது அடிப்­படை வச­திகள் அற்­ற­வர்­க­ளாக வாழ்­வா­தார உபா­யங்கள் இல்­லா­த­வர்­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருக்கும் தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து கவனம் செலுத்த ஆளுநர் ஏன் வர­வில்லை என்ற கடு­மை­யான விச­னத்தை வெளிக்­காட்­டி­யுள்­ளார்கள். கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கடந்த மாதம் 21 ஆம் திகதி சனிக்­கி­ழமை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்­னாண்டோ மற்றும் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஸீர் அஹமட், மாகாணக் கல்வி மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ் அமைச்­ச­ர் சி. தண்­டா­யு­த­பாணி ஆகியோர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துக்கு விஜயம் செய்­தி­ருந்­தனர்.
1983ஆம் ஆண்டை தொடர்ந்து ஏற்­பட்ட யுத்தம் கார­ண­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த சிங்­கள மக்­களை அவர்கள் முன்பு வாழ்ந்­த­தாக கூறப்­படும் இடங்­களில் மீளக்­கு­டி­யேற்ற முடி­யுமா என ஆராய்­வ­தற்­கா­கவும் முடி­வு­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவும் ஆளுநர் தலைமையில் கு­ழு­வினர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்­தார்கள். இவர்­களின் வரு­கை­யா­னது ஓர் இனத்தை மையப்­ப­டுத்தி அவர்­களின் மீள் குடி­யேற்ற நலன் சார்ந்­த­தாக இருக்­கின்­றது என்­பது மட்­டு­மன்றி ஆளு­ந­ரினால் கூட்­டப்­பட்ட இந்த மீள்­கு­டி­யேற்ற கூட்­டத்­துக்கு உள்ளூர் அர­சியல் தலை­வர்­க­ளான மாகாண சபை உறுப்­பி­னர்­களோ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ அழைக்­கப்­ப­டாமை கவலை தரு­கின்ற விட­ய­மென தமது விச­னத்தை தெரி­வித்­துள்­ளனர். மேற்­படி மாகாண சபை உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களும் கிழக்கு மாகாண சபையின் உறுப்­பி­னர்­க­ளான இரா. துரை­ரெட்ணம் ஆளு­நரின் மட்­டக்­க­ளப்பு விஜயம் பற்றி ஊட­கங்கள் மூலம் இப்­ப­டி­யொரு அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார். போரினால் பாதிக்­கப்­பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்­களை முறை­யாக மீள்­கு­டி­யேற்றம் செய்­யாமல் இழுத்­த­டிப்­புக்­களை மேற்­கொண்டு வரும் மத்­திய அர­சாங்­கமும் கிழக்கு மாகாண சபையும் போர் சூழல் நில­விய கால கட்­டத்தில் தமது நிலங்­களை அதிக பணத்­துக்கு விற்­பனை செய்­த­வர்கள் நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் தமி­ழர்­க­ளிடம் தமது காணி­களை கைமாறி சென்­ற­வர்­க­ளான சிங்­கள மக்­களை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மீள்­கு­டி­யேற்றம் செய்து காணி­களை வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் முன்­வந்­துள்­ளமை அதிர்ச்­சியை தரும் விட­ய­மா­கு­மென குறிப்­பிட்­டி­ருந்தார்.
இதே­போன்­ற­தொரு சீற்­றத்தை பின்­வ­ரு­மாறு வெளிக்­காட்­டி­யுள்ளார் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­திரன். அவர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது, மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கடந்த காலங்­களில் இருந்த சிங்­கள மக்­களின் தர­வு­களைத் திரட்டி அவர்­களை மீளக்­கு­டி­ய­மர்த்­து­வ­தற்­கான ஒரு முயற்­சி­யா­கவே கலந்­து­ரை­யா­டல் செய்ய ஆளுநர் மட்­டக்­க­ளப்­புக்கு வந்­துள்ளார். ஆளுநர் மட்­டக்­க­ளப்­புக்கு வரு­வது தொடர்­பாக த.தே. கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கோ மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கோ அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அவ­ருடன் உடன் வந்­த­வர்­களும் எங்­க­ளுக்கு அறி­விக்­க­வில்­லை­யென குற்றம் சுமத்­தி­யுள்ளார். அவர் மேலும் தெரி­வித்­தி­ருந்­த­தா­வது சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வ­தற்கு முன் தமிழ் மக்­க­ளுக்­கான மீள்­கு­டி­யேற்­றத்­தையும் புனர்­வாழ்­வையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறி­யி­ருந்தார்.
சிங்­கள மக்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் யுத்­தத்­துக்கு முன்­னைய காலத்தில் வாழ்ந்­தி­ருக்­கின்­றார்­களா? என மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன் செல்­வ­ராஜாவை விடம் கேட்ட போது அவர் விளக்கம் தந்தார். யுத்த காலத்­துக்கு முன் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பாசிக்­கு­டா­விலும் மட்­டக்­க­ளப்பு நக­ரப்­ப­கு­தி­களில் சில இடங்­க­ளிலும் ஏறாவூர் பிர­தே­சத்தில் புன்­னைக்­குடா விலும் அவர்கள் குடி­யி­ருந்­தார்கள். யுத்த நிலை கார­ண­மாக தமது நிலங்­களை பெறு­ம­தி­யான விலைக்கு விற்பனை செய்து விட்டுச் சென்று விட்­டார்கள் என்று குறிப்­பிட்டார்.
சம்பூர் குடி­யேற்­றம் முடுக்கி விடப்­பட்­ட சூழ்­நி­லையில் யுத்த காலத்­துக்கு முன் குடி­யி­ருந்த சிங்­கள மக்­களை மீளக்­கு­டி­யேற்றும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்த ஆளுநர் கல்­குடா வலை­வா­டியில் முன்­னைய காலங்­களில் குடி­யி­ருந்த சிங்­கள மக்­களை குடி­யேற்றும் நோக்­குடன் வாழைச்­சேனை பிர­தேச செய­லாளர் அலு­வ­ல­கத்­திலும் அதே­போன்று ஜெயந்­தி­புர மக்­களின் குடி­யேற்றம் சம்­பந்­த­மாக மண்­முனை வடக்கு பிர­தேச செய­லாளர் அலு­வ­ல­கத்­திலும் புல்­லு­மலை மங்­க­ல­கம, கோப்­பா­வெல, புன்­னைக்­குடா ஆகிய பிர­தே­சங்­களில் வாழ்ந்த சிங்­கள மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் பற்றி ஆராய்­வ­தற்­கென செங்­க­லடி பிர­தேச செய­லாளர் அலு­வ­ல­கத்­திலும் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யுள்ளார்.
இக்­க­லந்­து­ரை­யாடலில் சிங்­கள மக்­க­ளுக்­கான மீள்­கு­டி­யேற்ற விவ­காரம் மட்­டுமே ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த கலந்­து­ரை­யா­டலில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஸீர் அஹமட் மாகாண கல்வி மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு அமைச்சர் எஸ். தண்­டா­யு­த­பா­ணி உடன் இருந்­துள்­ளனர்.
மூன்று இடங்­க­ளிலும் நடை­பெற்ற கூட்­டத்தின் போது குடி­யி­ருந்து விட்டு தமது காணி­களை பெறு­ம­தி­யான விலைக்கு விற்பனை செய்து விட்டு சென்ற சிங்­கள மக்கள் தமக்கு மிக நெருக்­க­மாக தெரிந்­த­வர்­க­ளிடம் காணி­க­ளையும் வீடு­க­ளையும் ஒப்­ப­டைத்து சென்­ற­வர்கள் பயத்தின் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து சென்றவர்கள் என்பன இதன்போது தமிழ் மக்கள் சார்ந்த பல்­வேறு பிரச்­சி­னைகள் ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த விவ­கா­ரங்­களில் ஆளுநர் பொறுப்­பா­கவும் நிதா­ன­மா­கவும் நடந்து கொண்டார் என்று பேசப்­ப­டு­கின்­றது. தமது சொந்த நிலங்­களை பெறு­ம­தி­யான விலைக்கு விற்றுச் சென்ற சிங்­கள மக்­களின் காணி­களை மீளப்­பெற முடி­யாது. மீளப்­பெற்று தரு­வ­தற்கு சட்­டத்தில் இட­மில்­லை­யெனக் கூறி­ய­துடன் இடம்­பெ­யர்ந்த சிங்­கள மக்­களின் காணி­க­ளையோ வீடு­க­ளையோ தம­தாக்­கிக்­கொண்ட தமிழ் முஸ்லிம் மக்­களின் விவ­காரம் தொடர்­பாக ஆரா­யப்­பட வேண்டும். இவர்­க­ளுக்கு மாற்று காணி­களை வழங்­கு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கி­றதா என ஆராயும் படியும் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளும்­ப­டியும் ஆளுநர் தமது அதி­கா­ரி­க­ளுக்கும் பிர­தேச செய­லா­ளர்­க­ளுக்கும் பணித்து விட்டு சென்­றுள்ளார்.
ஆளு­நரின் மட்­டக்­க­ளப்­புக்­கான இந்த விஜ­ய­மா­னது பல­முனைப் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. தனி­யொரு இனத்தின் மீள்­கு­டி­யேற்­றத்தை மட்டும் குறிக்­கோ­ளாக கொண்டு ஆளு­நரின் விஜயம் அமைந்­துள்­ளது என்ற குற்­றச்­சாட்டு ஒரு­பு­றமும், இந்த கலந்­து­ரை­யா­ட­லுக்கு உள்ளூர் அர­சியல் வாதி­களோ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ அழைக்­கப்­ப­டாமை மறு­பு­றமும் குற்­றச்­சாட்­டா­கவும் ஆளு­ந­ருடன் வந்­தி­ருந்த கிழக்கு மாகாண முதல் அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் உள்ளூர் அர­சியல் தலை­வர்­களை உதா­சீனம் செய்து விட்­டார்கள் என்­பது இன்­னொரு புற குற்­றச்­சாட்­டா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.
கிழக்கு மாகாணம் மூவின மக்­களும் சம­மா­கவும் சமத்­து­வ­மா­கவும் வாழ்­கின்ற பிர­தேசம். அந்த வகையில் தமது கடமை ஏற்பு நிகழ்­வுக்கு பிறகு முதல் தடவையாக மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்த ஆளுநர் ஒஸ்டின் பெர்­னாண்டோ. சிங்­கள மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக ஆராய்­வ­தற்கு மட்­டுமே வருகை தந்துள்ளார். இம்­மா­வட்­டத்தில் வாழ்­கின்ற ஏனைய மக்­களின் பிரச்­சினை பற்றி கேட்­ட­றிய வர­வில்லை.
ஏனைய சமூ­கங்­களை கண்டும் காணாத சமூ­கங்­க­ளாக பார்க்­கின்­றாரா? என மாகாண சபை உறுப்­பினர் இந்­தி­ர­குமார் தெரி­வித்தார். அவர் மேலும் கருத்து கூறு­கையில் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் யுத்த கெடு­பி­டிகள் கார­ண­மாக முற்­றாக பாதிக்­கப்­பட்ட ஒரு மாவட்டம். ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் இடம்­பெ­யர்ந்து யுத்த காலத்தில் வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் மீண்டும் மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட போதும் முறை­யான அடிப்­படை வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்லை. உரிய வாழ்­வா­தா­ரங்­க­ளுக்கு வழி­காட்­டப்­ப­ட­வில்லை. இவ்­வாறு இருக்கும் போது ஓரி­னத்தின் மீள்­கு­டி­யேற்­றத்­திலும் புனர்­வாழ்­விலும் அக்­கறை செலுத்திக் கொண்டு ஆளுநர் குழாம் மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்­தமை விச­னத்தை உண்டு பண்ணும் செய­லா­கு­மெனவும் குறிப்­பிட்டார்.
சம்பூர் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு உத்­த­ரவு வழங்­கி­யுள்ள ஜனா­தி­பதி நிலை­மையை சமப்­ப­டுத்­து­வ­தற்­காக மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் மேற்­கொண்டு சிங்­கள மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக கவனம் செலுத்த கட்­ட­ளை­யிட்­ட­தற்கு அமை­யவே கிழக்கு ஆளுநர் தனது முதல் விஜ­யத்தை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துக்கு மேற்­கொண்­டுள்ளார்.
ஆளு­நரின் மட்டு. நகர் விஜ­யத்தின் இன்­னு­மொரு பக்க விளை­வாக காணப்­ப­டு­வது உள்ளூர் அர­சியல் தலை­வர்­க­ளையோ பிர­மு­கர்­க­ளையோ அழைக்­க­வில்­லை­யென்ற குற்­றச்­சாட்­டாகும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றார்கள். அத்­துடன் மாகாண சபை உறுப்­பி­னர்கள் 6 பேர் அங்கம் வகிக்­கின்­றார்கள். யாருக்­குமே உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பு ஆளு­ந­ராலோ அல்­லது முத­ல­மைச்­ச­ராலோ விடப்­ப­ட­வில்­லை­யென்­பது அம்­மா­வட்­டத்தை சேர்ந்த அர­சியல் பிர­தி­நி­தி­க­ளுக்கு கடும் சீற்­றத்தை உண்டு பண்­ணி­யி­ருக்­கி­றது. இந்த அழைப்­பின்மை தொடர்­பாக கருத்து தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ப. அரிய நேத்­திரன் ஆளுநர் மட்­டக்­க­ளப்­புக்கு வரு­வது தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கோ மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கோ அறி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆளுநர் வரு­வதை விரும்­பு­கிறோம். ஆனால் சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வ­தற்­கா­கவோ காணி­களை விற்­பனை செய்து விட்டுச் சென்ற சிங்­கள மக்­க­ளுக்கு மீண்டும் அந்த காணி­களை பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்­கத்­துடன் வர முயல்­வது தவறு. முன்னாள் ஜனா­தி­பதி போல் அவர் செய்த வேலையை புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தொடர்ந்து செய்ய முனை­வா­ரானால் அவ­ருக்கு வழங்கி வரும் ஆத­ரவை மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டி ஏற்­படும் என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு அழைப்பு விட­ுக்கவில்­லை­யென்ற பிரச்­சினை தமிழ்த்­தே­சியக் கூட்­டுத்­த­ரப்­பி­ன­ருக்­கி­டையே கசப்­பு­ணர்­வையும் அதி­ருப்­தி­யையும் கூட ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்ற கருத்து தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மாகாண அமைச்­ச­ரான எஸ். தண்­டா­யு­த­பாணி மேற்­படி அழைப்பை தமக்கு விட்­டி­ருக்­கலாம். தெரி­வித்­தி­ருக்­கலாம். உள்ளூர் அர­சியல் தலை­வர்­க­ளுடன் கலந்து பேச வேண்­டிய வாய்ப்பை உரு­வாக்­கி­யி­ருக்­கலாம். ஆனால் எல்­லாமே உதா­சீ­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என மட்டு. நகர் பிர­தி­நி­திகள் கவ­லை­யு­டனும் அதே­வேளை ஆவே­சத்­து­டனும் கூறி­யி­ருந்­தார்கள்.
அது­வு­மன்றி 66 வருட அர­சியல் புரட்­சியின் உள்­ளீ­டு­க­ளாக அமைச்சர் பத­வியைப் பெற்­றுக்­கொண்ட கிழக்கு மாகாண மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் தனது மட்­டக்­க­ளப்பு விஜ­யத்தின் போது தமிழ் மக்கள் சார்ந்த எந்த ஒரு பிரச்­சி­னை­யையும் பேச முன் வர­வில்லை. எந்த மக்­க­ளையும் சந்­திக்­க­வில்லை. பாதிக்­கப்­பட்ட எந்த கிரா­மத்­துக்கும் போக எண்­ண­வில்லை. ஒரு துளி நேரத்தைக் கூட தமிழ் மக்­களின் சார்­பாக செல­வ­ழிக்­காமல் ஆளு­நரின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப நடந்து கொண்­டது கவலை தரும் விட­ய­மா­கவும் விசனப் புள்­ளி­யா­கவும் இருக்­கி­றது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அரி­ய­நேத்­திரன் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான பிர­சன்னா இந்­தி­ர­குமார் தர்­ம­ரெட்ணம் ஆகியோர் தெரி­வித்­தனர்.
இது ஒரு புற­மி­ருக்க முதல் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கிழக்கின் முதல் அமைச்சர் என்ற வகையில் முஸ்லிம் மக்­களின் மீள் குடி­யேற்றம் பற்றி ஆளு­ந­ரிடம் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கலாம். அவர்­களின் வாழ்­வா­தா­ரங்கள் புனர்­வாழ்வு பற்றி தெளிவு படுத்­தி­யி­ருக்­கலாம். எதை­யுமே முன்­னெ­டுக்­காமல் நல்ல பிள்­ளைக்கு நடிக்கும் நோக்கில் சிங்­கள குடி­யேற்­றத்தை மட்டும் பேசு­வ­தற்­காக ஆளு­ந­ருடன் வருகை தந்­தி­ருந்­தமை முஸ்லிம் மக்­களின் நலனில் அக்­கறை காட்­டா­மையை புலப்­ப­டுத்­து­கின்­றது என முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் ஒருவர் கவலை தெரி­வித்தார். இதே­வேளை கிழக்கு முதல் அமைச்­சரின் இன்­னு­மொரு வகை இர­க­சியச் செயற்­பாடு இனப்­பா­கு­பாட்டை வெளிப்­ப­டுத்தும் செய­லாக காணப்­ப­டு­கி­றது என பிர­சன்னா தெரி­வித்தார். அதா­வது ஆளு­ந­ருடன் வருகை தந்­தி­ருந்த கிழக்கின் முத­ல­மைச்சர் புன்னைக்­குடா மக்­களை அழைத்து ஆளு­ந­ருடன் சந்­திக்க வைத்­துள்ளார். வந்­த­வர்கள் வேறு யாரு­மில்லை முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வா­ளர்கள். இந்த சந்­திப்பு ஏறாவூர் அலிகார் மகா வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது. ஆனால் தமிழ் மக்­களோ உண்­மையில் பாதிக்­கப்­பட்ட மக்­களோ ஆளு­நரைச் சந்­திப்­ப­தற்­கு­ரிய வாய்ப்பை யாரும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வில்லை. மாலை மரி­யா­தை­க­ளையும் மங்­க­ல­மான கேளிக்­கை­க­ளையும் எதிர்­பார்த்து வரு­கின்­றார்­களே தவிர பாதிக்­கப்­பட்ட மக்­களின் மீட்­சிக்­காக யாரும் வரு­வ­தாகத் தெரி­ய­வில்­லை­யெ­னக்­கூ­றினார் பிர­சன்னா. இவர் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பி­னரால் கிழக்கு மாகாண உதவி தவி­சா­ள­ராக பிரே­ரிக்­கப்­பட்­டவர் என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.
இதே­வேளை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இருந்து இடம்­பெ­யர்ந்த சிங்­கள மக்­க­ளு­ட­னான சந்­திப்பு மண்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற போது உரை­யாற்­றிய கல்வி அமைச்சர் சி. தண்­டா­யு­த­பாணி இவ்­வாறு கூறி­யி­ருந்தார். இந்த நாட்டில் காணி­களை விட்டு வெளி­யேற்­றப்­பட்ட அல்­லது பல கார­ணங்­க­ளுக்­காக வெளி­யே­றி­ய­வர்கள் தமிழ் மக்­களே. போர் கார­ண­மா­கவும் வேறு பல கார­ணங்­க­ளி­னாலும் காணி­களை விட்டு வெளி­யே­றிய தமிழ் மக்கள் இன்னும் கூட காணிகள் அற்ற நிலை­யி­லேயே உள்­ளனர். கிழக்கு மாகா­ணத்தில் கூட அவ்­வா­றான நிலையே இருந்து வரு­கி­றது என குறிப்­பிட்­டி­ருந்தார்.
ஆளு­நரின் மட்­டக்­க­ளப்­புக்­கான விஜ­யத்­தை­யொட்டி மேற்­படி சம்­ப­வங்கள் சில உள்­ளக முரண்­பா­டு­
களை உண்­டாக்க முனைந்­துள்­ளன என்­பதை புரிந்து கொள்ள வேண்டும். அமைச்­சர்­க­ளி­னதும் கட்சித் தலை­வர்­க­ளி­னதும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டாத வரு­கை­களும் திக்கு விஜ­யங்­களும் உட்­கட்சி பூசல்­களை உண்­டாக்கப் பார்க்கின்றன. என்­பது ஒரு புறம் இருக்க சமத்துவமான பார்வையின்மை அல்லது நோக்கமின்மை இனத்துவ முரண்பாடுகளை மீண்டும் தூண்டி விட மூல காரணமாகி விடுகிறது. என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண சபையின் உறுப் பினரான இரா. துரைரெட்ணம் தான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியிருக்கும் விடயங்கள் ஆக்கி ரோஷம் நிறைந்தவையாக காணப் பட்டாலும் ஆழமாகப் பார்க்கும் போது அதில் காத்திரமான உண்மை கள் புதைந்துள்ளன என்பது வெளிப்
படை. கிழக்கு மக்களின் மீள்குடி யேற்றம் தொடர்பாக எட்டுத்தடவை மகஜர் அனுப்பியும் பலன் காண முடியவில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒருபுறமிருக்க தென்னிலங்கை யைச் சேர்ந்த சிங்கள மக்களை மீள்கு டியேற்றம் செய்ய கூட்டப்பட்ட கூட்
டத்தை எம்மால் ஜீரணிக்க முடி யாது. 1983 ஜூலை கலவரம் இடம்
பெற்ற காலத்தில் தமது வீடுவாசல் களையும் காணிகளையும் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து
விட்டு தமிழர் கொழும்பை விட்டு
வெளியேறியுள்ளனர். அவர்களின் காணிகளை ஆளுநரோ முதல் அமைச்
சரோ கல்வி அமைச்சரோ மீளப் பெற்றுத் தர முடியுமா? மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கு காணிகள் வழங்கப் படவில்லை. மட்டக்களப்பு மாவட் டத்தில் எல்வத்தைமடு மருதங் கேணிக்குளம் பெரியபுல்லுமலை வலையிறவு ஏறாவூர் நகர் உள்
ளிட்ட இடங்களிலுள்ள சுமார்
400க்கும் அதிகமான குடும்பங் களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப் படாமலும் மீள்குடியேற்றம் செய்யப் படாமலும் உள்ளமை போன்ற பல விடயங்களை துரைரெட்ணம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தார்மீகமான வினாக்கள். எவ்வாறான கட்சி விரிசல்களையும் இன முரண்பாடுகளையும் வளர்த்துக்
கொள்ளாத வகையில் அமைச் சர்களும் தலைவர்களும் அதிகாரி களும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Post a Comment

0 Comments