Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை மாவட்டத் தமிழர்கள் விண்ணப்பிக்க முடியாது

கிழக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்­றி­ட­மா­க­வுள்ள சமூக சேவை உத்­தி­யோ­கத்தர் தரம் II இற்கு மாவட்ட அடிப்­ப­டையில் ஆட்­சேர்ப்பு செய்­வ­தற்­காக திறந்த அல்­லது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட போட்டிப் பரீட்­சைக்கு தகை­மை­யு­டைய கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த விண்­ணப்­ப­தா­ரி­க­ளி­டமி­ருந்து அண்­மையில் விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன. இவ்­விண்­ணப்பம் கோரலில் அம்­பாறை மாவட்டத் தமி­ழர்கள் விண்­ணப்­பிக்க முடி­யாது எனவும் காட்­டப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றாக காட்­டப்­பட்­டுள்­ளதன் நோக் கம் என்ன? என காரை­தீவு பிர­தே­ச­ சபை தவி­சாளர் வை.கோபிகாத் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.
அவர் மேலும் கூறு­கையில்,
அம்­பாறை மாவட்­ட­மா­னது சுமார் தொண்­ணூ­றா­யிரம் தமிழ் வாக்­கா­ளர்­களைக் கொண்­டுள்­ள­துடன் ஒன்­றரை இலட்­சத்­திற்கு மேற்­பட்ட தமி­ழர்­களைக் கொண்­ட­தொரு மாவட்­ட­மாகும். இம்­மா­வட்­டத்தில் இவ்­வா­றான அரச தொழில்கள் வழங்­கு­ம் போது ஏன் இவ்­வா­றான பாகு­பாடு காட்­டப்­ப­ட­வேண்டும் கடந்த காலங்­களில் கூட முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்கள், அபி­வி­ருத்தி உத்­தி­யோகத்­தர்கள், சார­திகள் மற்றும் சிற்­றூ­ழி­யர்கள் நிய­ம­னங்கள் என்­ப­னவும் எழுத்துப் பரீட்­சைகள் மற்றும் நேர்­முகப் பரீட்­சை­களில் தெரிவுசெய்­யப்­பட்டும் தமி­ழர்கள் என்­ற­ப­டியால் நிய­ம­னங்கள் மறுக்­கப்­பட்டு சகோ­தர இனத்­த­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. அவ்­வாறு மறுக்­கப்­பட்ட பின்னர் இம்­முறை பகி­ரங்­க­மா­கவே இவ்­வாறு ஒரு இனம் தாம் விரும்­பிய ஒரு தொழி­லினை செய்­யாமல் தடுப்­ப­தென்­பது மிகவும் பாரி­ய­தொரு அப்­பட்­ட­மான மனித உரி­மையை மீறும் செய­லாகும்.
தமி­ழி­ன­மா­னது கடந்­த­கால யுத்­தத்தின் பின்னர் தம்­மி­ட­முள்ள கல்­வி­யினை மாத்­திரம் மூல­த­ன­மாக வைத்து தமது முன்­னேற்­றத்­தினை ஏற்­ப­டுத்த நினைக்கும் காலத்தில் அத­னையும் திட்­ட­மிட்டு ஒரு மாவட்­டத்­தினுள் புறக்­க­ணிப்­பது நியா­ய­மா­னதா?சகோ­தர இனங்கள் வியா­பா­ரத்தில் முன்­னேறும் அதே தறு­வா யில் சிறி­ய­ளவி­லான கல்­வி­யினை மாத்­திரம் வைத்­துக்­கொண்டு பலத்த அர­சியல் பின்­ன­ணியில் இவ்­வா­றாக மாகாண சபையின் அதி­கா­ரத்­தினைப் பயன்­ப­டுத்தி அவர்கள் மாத்­தி­ரமே அரச தொழில் பெற­வேண்­டு­மென்று செயற்­ப­டு­த­லா­னது முற்­றிலும் கண்­டிக்­கப்­பட வேண்­டிய விட­யமே. ஏனெனில் போட்­டிப் ­ப­ரீட்­சையில் சிறந்த மதிப்­பெண்ணை பெறும் ஒரு பரீட்­சார்த்­தி­யினை தேர்ந்­தெ­டுப்பின் அப்­ப­ரீட்­சையில் தமி­ழர்கள் முதன்­நி­லையில் இருப்­பதால் இவர்­களின் இய­லாமை வெளிப்­படும் என்­ப­தனை நன்கு உணர்ந்தேன். இவ்­வா­றான தந்­தி­ரங்­களை பாவித்து தமி­ழர்­களைப் புறக்­க­ணிக்­கின்ற செயற்­பாட்­டினை முன்­னெ­டுக்­கின்­றனர்.
இதனைப் போன்று பல அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளிலும் அம்­பாறை மாவட்ட தமிழ் மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் திட்­ட­மிட்டு சகோ­தர அர­சியல் தலை­மை­களால் தமி­ழர்­களின் காணிகள் பறிக்­கப்­பட்டும் அச்­சு­றுத்­தப்­பட்டும் வரு­வ­த­னையும் பிர­தே­சத்தின் அபி­வி­ருத்­தி­களை நிர்­வாகச் செயற்­பாட்­டினை முன்­னெ­டுக்­க­வேண்­டிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு வழங்கி நிதி­களை வீண­டித்த நிகழ்­வு­களு­ இது­வ­ரையில் நடந்­தே­றிய நிதர்­ச­ன­மான உண்­மை­யாகும். எல்­லா­வற்­றிற்கும் மேலாக முன்­னைய உள்­ளூ­ராட்சி அமைச்­சரின் திட்­ட­மிட்ட ரீதியில் அம்­பாறை மாவட்ட தமிழ் பிர­தேச சபை­களின் செயற்­பாட்டை முடக்­கு­வ­தற்­காக அவற்­றிற்கு தேவை­க­ளாக இருந்த பல வாக­னங்­க­ளினை வழங்­காமல் தேவைக்கு அதி­க­மாக உள்ள மற்­றைய சபை­க­ளுக்கே வழங்­கி­ய­மை­யா­னது தமிழ் மக்கள் மீது எவ்­வ­ளவு பாகு­பாட்­டினை காட்டும் செயற்­பாடு என்­ப­தனை எம்­மக்கள் நன்கு அறிவர்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடருமா னால் எதிர்காலத்திலும் மீண்டுமோர் ஆயு தக் கலாசாரம் தோன்றக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதனையும் கருத்தில் கொண்டு செயற்பட அனைத்து தலைமைக ளும் முன்வரவேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

Post a Comment

0 Comments