ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவசர அழைப்பினையேற்று இன்று (22) தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
இச் சந்திப்பானது ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும், இதன்போது கிழக்கு மாகாணசபையின் புதிய ஆட்சி அமைவதிலுள்ள சிக்கல் நிலையினை தீர்த்துவைக்குமுகமாக ஜனாதிபதி இவ் அழைப்பினை விடுத்திருக்கலாமென நம்பப்படுவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


0 Comments