Home » » குடிசையில் தீ! தந்தையும் குழந்தையும் பலி: அம்பாறையில் சம்பவம்

குடிசையில் தீ! தந்தையும் குழந்தையும் பலி: அம்பாறையில் சம்பவம்

வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தந்தையும் 3 வயதுடைய மகனும் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்மாயில்புரம் சுனாமி விட்டுத்திட்ட குடியிருப்பிலேயே இந்தப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடிசை வீட்டில் உறக்கிக் கொண்டிருந்த 43 வயது தந்தை மற்றும் 3 வயது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ள நிலையில், 7 வயது மகள் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |