Home » » கதிர்காம யாத்திரை சென்ற 50 பயணிகள் மயிரிழையில் உயிர்தப்பினர் (Video)

கதிர்காம யாத்திரை சென்ற 50 பயணிகள் மயிரிழையில் உயிர்தப்பினர் (Video)

கதிர்காமத்தில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று பாரிய விபத்து ஒன்றிலிருந்து தப்பியுள்ளது.
நேற்றைய தினம் 50 யாத்திரிகர்களுடன்  பயணித்த தனியார் பஸ்ஸொன்று சியம்பலாந்துவ ‘ஹெட ஓயா’ பாலத்தில் விபத்துக்குள்ளானது.
பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் மோதிய பஸ் தரித்து நின்றதால் பாரிய விபத்தும், உயிர்ச் சேதங்களும் தடுக்கப்பட்டுள்ளன.
பஸ்ஸில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |