Home » » இலங்கையை வழிக்கு கொண்டுவர பொருளாதாரத் தடை – பிரித்தானியா

இலங்கையை வழிக்கு கொண்டுவர பொருளாதாரத் தடை – பிரித்தானியா

பிரித்தானியா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வரும் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்த கொண்ட பிரித்தானியா பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரித்தானியா இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் பிரித்தானியா இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் பிரதமர் கமரூனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து பிரித்தானியா பொருளதார தடைவிதிக்கும் யோசனை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக பேசப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |