மாங்குளம் - பனிக்கன்குளம் பகுதியில் - ஏ9 வீதியில் இன்று மாலை 4.50 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கயஸ் வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியும் நேருக்கு நேர் மோதுண்டதுடன் கயஸ் வாகனம் மீது லொறி ஏறி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இவ்விபத்தில் கயஸ் வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் இருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கயஸ் வாகன சாரதி மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கி தன்னியக்க இயந்திரங்களை சீர்செய்கின்ற கடமைக்காக வந்த கே ஜே சமிந்த, பி குணதாச ,டி குமார ஆகிய மூவரே படுகாயமடைந்தவர்களாவர்
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்பவ இடத்துக்கு வருகைதந்த மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: