Home » » நாளை 27 ஆம் திகதி முதல் - காலை 7.30 - மாலை 1.30 வரை மட்டுமே அதிபர்,ஆசிரியர்கள் செயற்படுவர். 16 ம்திகதி முதல் 5 நாட்கள் சுகயீன லீவு போராட்டம்!

நாளை 27 ஆம் திகதி முதல் - காலை 7.30 - மாலை 1.30 வரை மட்டுமே அதிபர்,ஆசிரியர்கள் செயற்படுவர். 16 ம்திகதி முதல் 5 நாட்கள் சுகயீன லீவு போராட்டம்!



கல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் - வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்கள் செல்லவில்லை.

இதன் பின்னர் கூடிய தொழிற்சங்கங்கள் - இடைக்கால சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபம் உடனடியாக வெளியிடப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் - 
நாளை 27 ஆம் திகதி முதல் சகல அதிபர் ஆசிரியர்களும் - காலை 7.30 மணிமுதல் மாலை 1.30 வரையும் - மலையக பாடசாலைகளில் 8.00 - 2.00 மணிவரையும் மட்டுமே பாடசாலை செயற்பாடுகளை  மேற்கொள்வர்.
ஏனைய மேலதிக செயற்பாடுகள் அனைத்தையும் புறக்கணிப்பதுடன் - அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கமறுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

உரியதீர்வு கிடைக்கவில்லையெனின் - மார்ச்மாதம் 16 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக சுகயீன லீவுப் போராட்டம் இடம்பெறும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இதனால் ஏற்படும்  பாதிப்புக்கள் குறித்து - தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது -ஏமாற்றிவரும் இந்த அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என்றும் - ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |