கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2019ம் ஆண்டின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி மாணவன் ஏ.டிலக்சன் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்று 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவின் கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவாகியுள்ளார். நீளம் பாய்தல் (6.45 மீற்றர்), உயரம் பாய்தல் (1.83 மீற்றர்) ஆகிய போட்டிகளிலேயே இவர் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தார்.
பாடசாலைக்கும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது.
0 comments: