Home » » சஹ்ரானின் சகோதரியின் வீட்டில் பெருமளவு பணம் சிக்கியது!

சஹ்ரானின் சகோதரியின் வீட்டில் பெருமளவு பணம் சிக்கியது!

இலங்கை குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானின் இளைய சகோதரியின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சஹ்ரானின் சகோதரியான மொஹமட் காதின் மதனியா (வயது-25) என்பவரின் புதிய காத்தான்குடி-3 இல் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொலிஸ் அதிகாரி எம்.எம்.பி.தீகவதுர தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து முகமட் சர்ஹான் ஹாசீமின் சகோதரியான முகமது காசீம் மதனியா(25வயது) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் முகமட் சஹ்ரான் ஹாசீமின் குடும்ப உறுப்பினர்கள் சாய்ந்தமருதில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டிருந்த நிலையில் ஒரு சகோதரி காத்தான்குடியில் இருந்துவந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைக பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |