Home » » கொழும்பு தற்கொலைதாரியின் உறவினர் காத்தான்குடியில் கைது? நேற்றிரவு நடந்த திடீர் சுற்றிவளைப்பு!!

கொழும்பு தற்கொலைதாரியின் உறவினர் காத்தான்குடியில் கைது? நேற்றிரவு நடந்த திடீர் சுற்றிவளைப்பு!!

மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்றிரவு திடீர் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாக எமது மட்டக்களப்புச் செய்தியாளர் கூறுகின்றார்.
இந்த சுற்றிவளைப்பின்போது ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
கொழும்பிலிருந்து வந்த விசேட புலனாய்வுக் குழுவொன்றே அதிரடிப்படையினருடன் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் சிலரைக் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கிரிலா கோட்டலில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரின் மனைவியின் சகோதரரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் இந்த கொடூர தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |